இத்தாலியில் ஏற்பட்ட பூமியதிர்வினால் சுமார் 25 இலங்கையர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தெரிவித்துள்ளது. இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களின் பெயர் விபரங்களை இங்கே காணலாம் .

இதனால் இடம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கப்பட்டுள்ளதை இத்தாலியிலுள்ள இலங்கை தூதுவராலயம் உறுதிப்படுத்தியதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தேவையான உதவிகளை வழங்குவதற்காக பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள இலங்கை சமூகத்தினர் மற்றும் இத்தாலியின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றுடன் இலங்கை தூதுவராலயம தொடர்ந்து தொடர்புகளை பேணி வருகின்றது என வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்தது.
Title :
இத்தாலியில் ஏற்பட்ட பூமியதிர்வினால் இடம்பெயர்ந்தனர் இலங்கையர்கள்!!
Description : இத்தாலியில் ஏற்பட்ட பூமியதிர்வினால் சுமார் 25 இலங்கையர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தெரிவித்துள்ளது. இவ்வாறு இடம்பெயர்ந்தவர்...
Rating :
5